கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தாண்டா
திரைப்படம் மாபெரும் வெற்றியைப்பெற்றது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே
மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் 'Asault சேது' கதாபாத்திரத்தில் நடித்த
பாபி சிம்ஹா-விற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படம் ஒரு 'Trend Setter'
படமாக அமைந்தது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான
'ஜிகர்தண்டா டபுள் X' திரைப்படத்தின் முன்னோட்ட டீஸர் வெளியாகி பட்டையை
கிளப்புகிறது.
இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா முக்கிய
கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இதற்கு முன்பு கார்த்திக்
சுப்புராஜ்-உடன் SJ சூர்யா கூட்டணி அமைத்து இறைவி படத்தில் நடித்துள்ளார்.
அந்த கதாப்பாத்திரம் அவருக்கு நடிகருக்கான, வில்லன் நடிகருக்கான நல்ல
அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த ஜிகர்தண்டா டபுள் X படத்தில்
கார்த்திக் சுப்புராஜ், SJ சூர்யாவோடு புதியதாக கூட்டணி சேர உள்ளார் ராகவா
லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று (12-12-2022) துவங்க உள்ளது என்று கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்த படம் பல மொழிகளில் வெளியாகக்கூடிய PAN இந்தியா படமாக உருவெடுக்க உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று (12-12-2022) துவங்க உள்ளது என்று கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்த படம் பல மொழிகளில் வெளியாகக்கூடிய PAN இந்தியா படமாக உருவெடுக்க உள்ளது.
No comments:
Post a Comment