சில நாட்களுக்கு முன்பு நடிகர் சசிகுமார் நடித்திருந்த அயோத்தி படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மூன்று தினங்களுக்கு முன்பு இந்த படம் வெளியாகி 25 நாட்களை கடந்தது. இந்த நிலையில் சசிகுமார் திருவள்ளுரில் உள்ள கூவம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரிப்புரசுந்தரி உடனுறை திருபுராந்தக சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவர் பூ மற்றும் பிரசாதப் பையை அர்ச்சகரிடமிருந்து வாங்குவது போல் உள்ள புகைப்படத்தை அந்த கோயில் நிர்வாகம் தங்களுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். அதனை சசிகுமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment